மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோற்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழகம் போராடியதற்காக, மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்துள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. மாணவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அவரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

ஆளுநர் மீது நிர்மலா தேவி எழுப்பிய புகார்களின் நிலை என்ன? கருத்தியல் ரீதியாக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து வருவதால் பா.ஜ.க., அரசு வன்மத்துடன் எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சசிக்குமாரின் கொலை வழக்கு மட்டும் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? உக்கடம் மேம்பாலம் கட்டுமானம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களை களைந்துவிட்டு, ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...