டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை முடித்து வைக்கிறது சி.பி.ஐ.

கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், அதனை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்துக் கொண்ட சி.பி.ஐ., கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே. தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லாததால் விசாரணையை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சி.பி.ஐ., அறிக்கையின் முகாந்திரத்தைச் சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சி.பி.ஐ., அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் வருகிற 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, நாளை மறுதினம் கோவை வரும் அவரது தந்தை, சி.பி.ஐ., அறிக்கையைப் படித்து பார்த்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...