சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இரு திருமண மண்டபங்களை தனியார் அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், திருக்கோயில் வசம் திருமண மண்டபங்களை ஒப்படைக்கத் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள மண்டபத்தின் சாவிகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்காமல் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...