கோவையில் சுமார் ரூ. 4 கோடியே 91 லட்சம் மதிப்பில் சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 4 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 4 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சியின் 16, 18, 19 மற்றும் 20 வார்டுகளில் பேருந்து திருப்பு முனையம், ஆய்வாளர் அலுவலகம், பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 91 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க. விஜயகார்த்திகேயன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ப. காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவை மாநகராட்சிப் பகுதியில் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 108 கோடி மதிப்பில் சிறப்பாக செயல்பாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலைகள், பாலங்கள், மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கான பூங்காக்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.



மேலும், வடவள்ளியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி புதிய பேருந்து திருப்பு முனையம் ரூ. 2 கோடியே 97 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...