தேசிய கடற்கரை கால்பந்து போட்டிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் முதன்முறையாக கடற்கரை கால்பந்து போட்டிகள் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தமிழகம், குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் தேர்வாகியுள்ளன. இதில், விளையாடும் தமிழ்நாடு அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கடற்கரை கால்பந்தாட்ட வீரர்கள் 4 பேரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் தேர்வாகியுள்ளனர். இதற்கான வீரர்கள் அறிமுகம் கூட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து, வீரர்களை உருவாக்கிய ராமன் ரகுநாத் கூறுகையில், "இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி, இந்திய கால்பந்து அணியில் பங்கேற்க செய்துள்ளேன். புட்வாலி என்றழைக்கப்படும் போட்டியில் இதுவரை மூன்று வீரர்களை சர்வதேச அளவில் பங்கேற்க செய்துள்ளேன். தற்போது, கடற்கரை கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய வைத்துள்ளேன். இது நீலகிரி மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது," அவர் தெரிவித்தார்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...