திருப்பூரில் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி 16-ம் தேதி தொடக்கம்

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து, இந்திய பின்னலாடை கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், "இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிறப்பான ஏற்றுமதியை மேற்கொண்டு இந்தியாவிற்கு போட்டி நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் சார்பில் 45-வது பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளோம். 

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் 60 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது. 

அதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கு பெற உள்ளனர். கடந்த ஆண்டு 300 முதல் 400 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக வர்த்தக விசாரணை மேற்கொள்ளப்படும். நீண்ட கால வர்த்தகத்திற்கு இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...