புதுப்பொலிவு பெறுமா கூடலூர் ஊசி மலை சுற்றுலாத்தலம்?

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது.

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது. 



நீலகிரி மாவட்டம் கூடலூரில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஊசி மலை என்ற இரு பிரதான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில், முதுமலை புலிகள் காப்பகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

வளர்ப்பு யானைகள் முகாம், யானை சவாரி, வாகன சவாரி என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் முதுமலையில் ஏராளம். இதன் காரணமாக முதுமலை மற்றும் அதையொட்டியுள்ள மசினகுடி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.



ஊசி மலை 

கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஊசி மலை. வனத்தை ஒட்டியுள்ள இந்த காட்சி முனையில் இருந்து கூடலூர் பகுதியை பறவையின் பார்வையில் கண்டு ரசிக்கலாம். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. 



மலையின் உச்சியில் உள்ள காட்சி முனைக்கு செல்லும் பாதை 'கரணம் தப்பினால் மரணம்' என்பதைப் போல ஆபத்தானது. சற்றும் அசந்தால் பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அந்த பாதையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்புகள் தற்போது உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. தடுப்புகள் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையிலேயே சுற்றுலா பயணிகள் நடமாடுகின்றனர். 



மேலும், காட்சி முனையில் சிலர் அருவருக்கத்தக்க முறையில் கிறுக்கிச் சென்றுள்ளனர். இது அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், நுழைவு வாயிலில் உள்ள காவலர் அறையை பல முறை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் காரணமாக மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.



"நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஊசி மலையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வனத்துறையினர் விளக்கமளிக்கின்றனர். ஆனால், ஊசி மலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இப்பகுதியை சுற்றுலாத் துறை கண்டு கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய இந்த நிலையில், ஊசி மலையை அரசு நல்ல முறையில் பராமரித்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...