தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோவினர் கைது: சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.


பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். 

மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று  முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.



இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகம், மற்றும் சேப்பாக்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து சென்னையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசு ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்கின்றனர். இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூடி வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுப்போம் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி சென்னை பல்கலைக்கழகம் அருகே தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எழும்பூர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது, ஆசிரியர் தியாகராஜன் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற தியாகராஜன் பாபநாசம் அரசுப் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக இருந்தவர் ஆவர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...