பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, பள்ளி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி வாகன சோதனை கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் இன்றும், நாளை மறுதினமும் நடக்கிறது.



இன்று மட்டும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 488 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்து உள்ளன. இந்த வாகனங்களில் பள்ளியின் பெயர், முகவரி, குழந்தைகள் ஏறிச் செல்லும் படிகளின் அளவு, ஜன்னல்களின் அளவு, எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள், நம்பர் பிளேட்டுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 19 வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனம் இயக்குவது மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, 16 வகையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இந்த ஆய்வில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், "இந்த ஆய்வானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டும் ஆய்வுப் பணி முதற்கட்டமாக நடைபெறுகிறது. இதில், பள்ளி வாகனங்களில் அவசரகால வழி படிக்கட்டுகளின் அளவுகள் போன்ற 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன," என்றார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...