உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியல்: நீலகிரி மலை ரயிலுக்கு இடம்

கோவை: லண்டனில் வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயில் இடம்பிடித்துள்ளது.

கோவை: லண்டனில் வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயில் இடம்பிடித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில், ஆரம்பத்தில் நிலக்கரியை எரித்து, அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் இயங்கியது. இந்த மலை ரயிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது மேலும் ஒரு சிறப்பு.

தற்போது, உலகின் சிறந்த ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயிலுக்கு இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இத்தாலி, ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ரம்யமான ரயில் பயணங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், நீலகிரி மலை ரயிலும் இடம் பிடித்துள்ளது.



தடக்.. தடக்.. என்று ஊர்ந்து செல்லும் நீலகிரி மலை ரயிலுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது, தென்னக ரயில்வே மற்றும் ரயில் பயண பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...