ஐந்தாவது நாளாக தொடரும் நீலகிரி தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டம்

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேறி பூங்கா உட்பட 5 பூங்காக்கள், 9 பண்ணைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 463 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாராந்திர விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தோட்டக்கலை இணை இயக்குநர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், அரசிடமிருந்து பதில் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.



இருப்பினும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகள், பாத்திகள் பராமரிப்பு பணிகள் 5-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த போராட்டம் தொடரும்பட்சத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஏற்பாடு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...