கோவை மாநகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு கூட்டம்

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

பூங்காக்கள், சாலைப்பணிகள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி, குடிநீர் விநியோகம் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பருவமழை தொடங்கும் முன்னதாகவே விரைவாகவும், நல்ல முறையிலும் பணிகளை முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகர பொறியாளர் (பொ) லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...