தமிழகத்தை புழுதி புயல் தாக்க வாய்ப்பு உள்ளதா?: வேளாண் பல்கலை., விளக்கம்

கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த இந்த புயலால் வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த புழுதி புயல் தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், "தமிழகத்தை புழுதி புயல் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது, சுழல் காற்று காரணமாக நிலத்தின் மீது உள்ள மண், காற்றில் கலந்து புழுதி புயல் ஏற்படுகின்றது. வடமாநிலங்களில் மண்ணின் பிடிப்புத் தன்மை குறைவு.

வடமாநிலங்களில் வீசக் கூடிய காற்றைப் போல் தமிழகத்தில் வேகமாக காற்று வீசாது. அதே நேரம் தமிழகத்தில் உள்ள மண்ணின் பிடிப்புத் தன்மை அதிகம். ஆகையால் புழுதி புயல் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மழை-வெயில்

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலையானது குறைந்துள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேர வெப்பநிலையானது 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.காற்றின் வேகம் 12 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து, இரண்டு நாட்களுக்குள் குறைந்து 8 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...