விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் 'தேனீ வேலி': ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 'தேனி வேலி'க்களை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 'தேனி வேலி'க்களை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் மனித - யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல்வேறு காரணங்களினால் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை நாசப்படுத்துவதோடு, இதனைத் தடுக்க முயலும் மனிதர்களையும் தாக்கி கொன்றுவிடும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

இதேபோல, இம்மோதலில் யானைகளும் மின்சாரம் வைத்து மனிதர்களால் கொல்லப்பட்டு வருகின்றன. எனவே, இந்த மனித - யானை மோதலைக் கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் போதிய பலனை தரவில்லை. இதனால், பயிர் மற்றும் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் ஊடுருவலை தடுப்பதற்காக, நடைமுறையில் உள்ள தேனீ வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், வனத்துறையினரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அதன்படி, விவசாய தோட்டங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள சோலார் மின் வேலியின் அருகில் சீரான இடைவெளியில் மர பெட்டிகளாலான தேன் கூடுகளை அமைத்து, அதில் தேனீக்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பெட்டியிலும் ராணி தேனீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருப்பதாலும் இவை நாள் முழுவதும் தேன் சேகரிப்பு பணியில் சுறுசுறுப்புடன் இயங்கியபடி இருக்கும். இவற்றின் இடைவிடாத ரீங்கார ஒலியைகேட்டு யானைகள் இதன் அருகில் கூட வருவதில்லை.

ஐந்து டன் எடை கொண்ட பிரமாண்ட யானையின் துதிக்கையில் உள்ள மென்மையான பகுதியில் ஒரு கிராம் எடை மட்டுமே கொண்ட தேனீ கொட்டினால் அதனை யானைகளால் தாங்க இயலாது என்ற காரணத்தினாலேயே அவை விலகி ஓடுகின்றன என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். 

குறிப்பாக, யானைகளின் ஊடுருவல் அதிகமாக உள்ள மலையடிவார கிராம விவசாயிகள், இதேபோல, தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களைத் தடுப்பது மட்டுமின்றி தூய்மையான தேன் சேகரித்து கூடுதல் வருவாயும் கிடைக்கும். மேலும், தேனீக்களின் மகரந்த சேர்க்கையினால் மகசூலும் நாற்பது சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

தேனீக்கள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சியும் அளிக்கப்படுவதால் மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தற்போது தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முயற்சி பரவலாக்கப்பட்டு பலனளிக்க துவங்கும் போது மனித - யானை மோதல்கள் குறைந்து இழப்புகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...