இந்திய ராணுவத்திற்கு தேர்வான வீரத் தமிழச்சி அன்னபூரணி

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணபூரணி. இவர், இந்தியா ராணுவத்தில் சேர்வதற்கு பல முறை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூரூவில் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் இந்திய சேவைகள் தேர்வு வாரியத்தில் தேர்வு எழுதினார். உலகில் 2-வது கடினமான விதிமுறைகளைக் கொண்ட இந்தப் பயிற்சி மையத்தில், வீரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு இணையான பயிற்சிகளைப் பெற்றார். ஏழைக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட வீரமங்கை அண்ணபூரணி, முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றதுடன், ராணுவ அதிகாரியாகவும் உயர்வு பெற்றார்.



தமிழகத்தில் இருந்து பல பெண்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வாகியுள்ளனர். யாரும் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இதனை உடைத்தெறிந்து ஆன்டிப்பட்டியில் இருந்து இந்திய ராணுவத்தில் கமாண்டராக வீரத்தமிழச்சி அன்னபூரணி தேர்வாகியுள்ளார்.

ஏற்கனவே, போபால் மற்றும் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த அவர், தனது பெற்றோர்களின் ஆதரவாலும், ஊக்கத்தாலும் 3-வது முறையாக தேர்வு எழுதி, ராணுவத்திற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த வீரமங்கைக்கு நமது சல்யூட்..!

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...