விற்பனைக்கு தயாரான பொது இடம் மீட்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 64-வது வார்டில், சுமார் 2.30 ஏக்கர் பரப்பளவில் ராம் ரெசிடென்சி என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கு 23 சென்ட் அளவிற்கு மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் அமைந்துள்ளது.



பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றிலும் கம்பி வேலி அமைத்து அந்த இடத்தை விற்பனை செய்ய, குடியிருப்பு உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு செயற்பாட்டாளரான தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது இடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட இருந்த பொது இடத்தை மீட்ட அதிகாரிகள், 'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்பு பலகையை வைத்துச் சென்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...