இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.


கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 



கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார், சுப்பிரமணியபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலணி பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு விசாரணைகள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர்,சுபேர் ஆகியோரின் இல்லங்களில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில், சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதிகாலை 3 மணி முதல் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில், சுகுணாபுரம் ஹைதர் அலி, பிலால் எஸ்டேட் ஹநீஸ், வெள்ளக்கிணறு முகமது அலி, துடியலூர் சதாம், செல்வபுரம் ஃப்பெபின் ரகுமான் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் செல்போன்கள், மெம்மரி கார்டுகள் போன்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதேபோல, ஹநீஸ் என்பவரது பட்டறையிலும் சோதனை செய்து வருகின்றனர். இதில், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் மறைக்கபட்டிருந்ததால், அது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில், ஃப்பெபின் ரகுமான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ., மேல் புகார் அளித்தார். இந்த நிலையில் இவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Video: Laxman

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...