உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் : விஷ்ணுபிரியாவின் தந்தை கோவையில் பேட்டி

கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தந்தை ரவி உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தந்தை ரவி, உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். 

வழக்கு தொடர்பாக, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி-க்கு, நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதில், "விஷ்ணுபிரியா தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., கைவிட உள்ளது. இந்த வழக்கை வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ., தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மே, 9-ல், நீதிமன்றத்தில் ஆஜராகி தெரியப்படுத்த வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விஷ்ணுபிரியாவின் தந்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

வழக்கு விசாரணையின் போது, ரவி சி.பி.ஐ., அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அடுத்த வாய்தாவில் எதிர்ப்பிற்கான காரணத்தை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரவி, "என் உயிரே போனாலும் இந்த வழக்கை கைவிடமாட்டேன். நியாயம் பெறுவேன்." என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் அனிதா ரவி கூறுகையில், "இந்த வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை. சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை முழுமையாகப் படித்த பின் ஆட்சேபனைகளைத் தெரிவிப்போம்." என்றார்.

Video: Laxman

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...