கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் 24 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பல இடங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. மேலும், 13-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாவட்டம் துவக்குடி மற்றும் மதுரையின் வடக்கு பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில், மேலூரில் 60 மி.மீ. மழையும், துவக்குடி (இஸ்ரோ)வில் 57 மி.மீ. மழையும், மதுரை (இஸ்ரோ) 42 மி.மீ. மழையும், பாலக்கோடு 40 மி.மீ. மழையும், பெருந்துறை 31 மி.மீ. மழையும், போடி நாயக்கனூர் 26 மி.மீ. மழையும், கோவை (பெரிய நாயக்கன் பாளையம்) மற்றும் விருதுநகரில் தலா 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.



இனி வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழகம், கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது, இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...