மலர் கண்காட்சியையொட்டி நீலகிரியில் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை சீசன் கொண்டாடப்படுவது வழக்கம். இச்சமயங்களில் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு சற்று மவுசு அதிகம். இதனைக் காண உலக முழுவதிலும் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு 122-வது மலர் கண்காட்சி 18-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைவரும் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கும் வகையில், 18-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ம் தேதி விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் 25-ம் தேதி இம்மாவட்டத்திற்கு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...