சோதனை என்ற பெயரில் சித்ரவதை: என்.ஐ.ஏ., மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் என்.ஐ.ஏ., விசாரணை வட்டத்திற்குள் உள்ளனர். இந்தக், கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உதவியதாக, மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 4 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் அத்துமீறி அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்வதாகக் கூறி பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகிய 3 பேரும் தங்களது குடும்பத்தினருடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அந்த மனுவில், என்.ஐ.ஏ., விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், அதிகாலையில் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன..?. மேலும், சசிக்குமார் கொலை வழக்கில் தங்களை வேண்டுமென்றே குற்றவாளிகளாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனால், தங்களது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Video: Laxman

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...