பாய், படுக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற சி.எம்.சி., காலனி பொதுமக்கள்

கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.எம்.சி., காலனி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும், தலித் மக்களை உள்ளடக்கிய இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 200 பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை வெள்ளலூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.



இதனிடையே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை முறைகேடுகள் இன்றி பெற்றுத் தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாய், தலையணை, காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.



தினக்கூலி பணிக்கு செல்லும் தங்களுக்கு, சொந்த இடத்திலேயே வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...