கேரளாவில் முதல் முறையாக நடைபெற்ற திருநம்பி - திருநங்கை திருமணம்

திருவனந்தபுரம் : கேரளாவில் முதன் முறையாக சட்டப்படி திருநம்பி - திருநங்கை திருமணம் செய்துகொண்டனர்.

திருவனந்தபுரம் : கேரளாவில் முதன் முறையாக சட்டப்படி திருநம்பி - திருநங்கை திருமணம் செய்துகொண்டனர். 

வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது கபீர். இவரது மனைவி ‌ஷனிபா. இவர்களின் மகள் இஷான். திருநம்பியான இஷான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆபரே‌ஷன் மூலம் ஆணாக மாறினார். இதுபோல திருவனந்தபுரம் பாட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன்-உஷா தம்பதியின் மகன் சூர்யா. திருநங்கையான இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் சாதாரண மனிதர்களை போல திருமண வாழ்க்கையில் நுழைய விரும்பினர். இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

பெற்றோர் சம்மதம் கிடைத்ததும் இஷான்-சூர்யா இருவரும் திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இவர்களின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள மன்னம் கிளப் அரங்கில் நேற்று நடைபெற்றது. 

கேரளாவில் இதுபோன்ற திருமணம் முதல் முறையாக நடைபெற்றதால் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. சீமா உள்ளிட்ட பிரமுகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...