கோவையில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் உள்ள பாடகிரி மலைப் பகுதியில் இருந்து கோவை வழியாக ஜீப்பில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், பீளமேடு போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கு இடமான ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர்.



அப்போது அதில், மூட்டை மூட்டையாய் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர், ஜீப்பில் வந்த இருவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் வனராஜ் (45) மற்றும் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் அவர்கள் இருவரையும் கைது போலீசார் ஜீப் மற்றும் அதில் இருந்த 250 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...