உணவக மேற்கூரை இடிந்து விழுந்து இளம் பெண் பலி

திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.


திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். 



திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாம் என்பவர் அமிர்தம் என்ற உணவகம் நடத்திவருகிறார். கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த உணவகத்தின் கான்கிரீட் கூரை நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு உணவு வாங்கச் சென்ற சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சரவஸ்வதி (22) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (21), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனிதா (22) ஆகியோர் லேசான காயமடைந்தனர். 

அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  இதனால் கோவை & ஈரோடு சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...