குட்கா வழக்கை திசை திருப்புகின்றனர் : நீதிமன்றத்தில் ஆஜரான எம்.எல்.ஏ., நா.கார்த்திக் பேட்டி

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் உட்பட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மற்றும் தங்கராஜ் ஆகியோர் கோவை மாவட்ட விடுமுறை கால நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தனர். முன்ஜாமீனை அடுத்து சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன் மறு உத்திரவு வரும் வரை இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் தினமும், கையெழுத்து இட உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கண்ணம்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலை விவகாரத்தில், நியாயமான முறையில் போராடிய தி.மு.க.,வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளனர். 

இதுதொடர்பாக, என் மீதும், பொய் வழக்கு போடப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளேன். இதில், தி.மு.க.,விற்கு எந்தத் தொடர்பும் இல்லை. குட்கா தொழிற்சாலையில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றேன். தி.மு.க.,வினர் அற வழியில் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தி.மு.க., ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், கடந்த 27-ம் தேதி, குட்கா வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. ஆனால், இது வரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். 

வழக்கை திசை திருப்பும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு, இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை." என்றார். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...