கோவையில் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 



தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் திறன் பயிற்சி மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கல்வி திறனுக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவரவர் பயிற்சி பெற்ற துறைக்கேற்ப வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். 



இந்த நிலையில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த விளம்பர ஊர்தி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திறன் பயிற்சி குறித்த காணொளி மூலம் விளக்கப்படும். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது :- தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 0422-2642388 அல்லது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2642041 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும், என்றார். 

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...