திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

திருப்பூர் : இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர். 



தமிழகத்தில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், மணல் கொள்ளையினை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற போராட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...