திருப்பூரில் பாதி எரிந்த நிலையில் ஆணின் கால் கண்டெடுப்பு : கொலையா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வளம் பாலம் கே.பி.என்., காலனி மின்மயானம் அருகே நொய்யல் ஆற்றையொட்டி சென்ற தெருநாய் ஒன்று, மனித கால் ஒன்றை வாயில் கவ்வியபடி ஓடியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை கண்டு மிரண்டனர். திடீரென சாலை ஓரத்தில் காலை போட்டு விட்டு நாய் ஓடி விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, துணி சுற்றிய நிலையில் கிடந்த கால் பகுதி, ஆணுடையது என்பது முதல்கட்டமாக தெரிய வந்தது.

இடது கால்பகுதி பாதி எரிந்த நிலையில், மீதி ஒரு பாகம் கொஞ்சம் தள்ளி கிடந்தது. காலில் கத்தரிக்கோல், மருத்துவமனையில் காயத்துக்கு கட்டப்படும் துணி சுற்றியிருந்தது. இதனால், ஏதாவது, மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை போன்ற நோயால் அகற்றப்பட்ட கால் தூக்கி வீசப்பட்டதா..? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனா்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...