பிரதமரை கொலை செய்வதாக தொலைபேசியில் பேசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் சேலத்தை சேர்ந்த நபரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் போது பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக பேசிய ஆடியோ சமூவ வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ரபீக்கை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்த அவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் ரபீக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

முகமது ரபிக் கைது செய்யப்பட்டதற்கான ஆணை மருத்துவமனையில் அவரிடம் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ரபீக் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதும், அதைத் தொடர்ந்து கார் திருட்டு, லாரி கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...