நாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21-ல் வழங்க முடிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 66,934 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில் நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் தேர்வுத் துறையின் இணையதளங்களான www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

அதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...