அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த நிலை மேற்கு நகர்கிறது. இது மெல்ல மெல்ல வளைகுடா நாடுகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை நோக்கி செல்கிறது. இந்த காற்றழுத்த நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று குறிப்பிடத்தக்க அளவிலான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 15 மி.மீ. மழையும், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் 1 மி.மி. அளவு மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரியாக 1.55 மி.மி. மழை பதிவாகியுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...