கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்: காங்கிரசுடன் கைகோர்த்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பா.ஜ.க., பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பா.ஜ.க., முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 70-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பா.ஜ.க., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.,வின் வெற்றி உறுதியானது. இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க., ஆட்சியமைப்பதை தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஆட்சியமைக்கப்போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தேவகவுடாவும் சந்தித்து பேசுகின்றனர். இது கர்நாடக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு, ஆட்சியமைப்பதற்கு தேவையான 112 இடங்களை பா.ஜ.க., பெறவில்லை எனில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...