கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன் பாளையம் சரகம், கோபனாரி பிரிவு, கோபனாரி மேற்கு சுற்றுக்குட்பட்ட கூடப்பட்டி வனப்பகுதியில் கூடுதுறை என்னும் இடமருகில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. இதனை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால், நோய்வாய்பட்டு, உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சுமார் 10 முதல் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...