பிளஸ் 2 பொதுத்தேர்வு : தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு.


சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு. 



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு எழுதும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித் தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர். 

முடிவு 

இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ .செங்கோட்டையன் வெளியிட்டார். 



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு :- 

* தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்.

* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்.

* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,

* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...