கோவையில் விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்தவருக்கு அபராதம்

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் முதன் முறையாக கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த மரம் ஒன்றின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "நேற்று மாலை 'மே-பிளவர்' என்ற 20 வயது மதிக்கத்தக்க மரம் லாரி மோதி விழுந்தது. இது குறித்து நீதிமன்ற வளாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த லாரி ஓட்டுனரை பிடித்தனர். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்த அதிகாரிகள், எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? என்பதை இன்று தெரிவிக்கவுள்ளனர்.

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்த அதிகாரிகள் முதன் முறையாக விபத்து மூலம் மரத்தை சாய்த்தவருக்கு அபராதம் விதிக்கின்றனர்." என்றார். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...