கர்நாடகாவில் நீடிக்கும் அரியணை குழப்பம்: கொச்சினில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களுக்கு விடுதி முன்பதிவு

கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.,டிவ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் மேற்பட்டோரும், ம.ஜ.த.வைச் சேர்ந்த ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களை விடுதியில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாக, ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்கள்., கொச்சியில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், ஜேபி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை பா.ஜ.க., முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். கர்நாடகாவில் நிலவி வரும் தற்போதைய சூழல், தமிழகத்தில் அரங்கேறிய கூவத்தூர் அரசியல் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...