'கனா' பட இயக்குநரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து '3' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக தற்போது வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், தயாரிக்க இருக்கும் முதல் படத்துக்கு ’கனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கபாலியின் ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடிய அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜா, சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக நினைக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் தந்தை என்ற கதைக்கருவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் தந்தையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் மகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதைக்கண்ட நடிகர் விஜய் படத்தின் இயக்குநரை பாராட்டியுள்ளார். விஜயின் வாழ்த்து தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...