நீலகிரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.66 சதவிகிதம் பேர் தேர்ச்சி

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7,802 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 2,893 மாணவர்களும், 4,180 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 84.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் மொத்தம் 3,062 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2,578 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.19 ஆக உள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...