குப்பைகளால் நிரம்பி வழியுது நொய்யல்

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது.

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது. 



கோவையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நொய்யல் ஆற்றுப் படுகை பாழ்பட்டு வருகிறது. தெருநாய்களின் வாழ்விடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவருகிறது வற்றிப்போன நொய்யல் ஆற்றங்கரை. 



காருண்யா நகர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாமல் பயணித்த நோய்யலின் கதி இது என்று நொந்து கொள்கின்றனர் ஆர்வலர்கள். 



இது குறித்து நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், "ஆற்றுப் படுகையில் இருந்த மரங்களை அகற்றுவதும் இந்த வறட்சிக்குக் காரணமாக உள்ளது. நொய்யல் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதோடு, நொய்யலில் கழிவு நீரும் கலக்கப்படுகிறது. இது வேதனையான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...