122-வது மலர் கண்காட்சிக்காக தயாராகி வரும் அரசு தாவரவியல் பூங்கா

நீலகிரி: கோடை விழாவின் மணிமகுடமாக திகழும் 122-வது மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: கோடை விழாவின் மணிமகுடமாக திகழும் 122-வது மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.



இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா, கடந்த 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கூடலூரில் 10-வது வாசனைப் பொருட்கள் கண்காட்சியும், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சியும் நடந்து முடிந்தன. இந்த நிலையில், உதகையின் மணிமகுடமாக திகழும் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 122-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இந்தக் கண்காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணை, 3,500 மலர்களை கொண்டு பார்பி டால் மாதிரி மற்றும் 25 ஆயிரம் மலர்களைக் கொண்டு வரவேற்பு அலங்காரம் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



அது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், 40 ஆயிரம் மலர் தொட்டிகளில் 180 ரகங்களில் சால்வியா, பெட் டூனியா, மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, டேலியா உள்ளிட்ட மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோட்டக்கலைத் துறை, வனத்துறை மற்றும் பல அரசு துறைகளின் சார்பில் அரங்குகள் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மலர்களால் பல்வேறு கலை நயங்களுடன் உருவாகி வரும், இந்த மலர் கண்காட்சியை, பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இம்மலர் கண்காட்சி முதன் முறையாக 5 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் மார்க்கமாகவும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.



மேலும், இந்தக் கண்காட்சியை தொடங்கி வைக்க வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி, 5 மாவட்டங்களிலிருந்தும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...