கோவையில் எஸ்.வி.சேகர் குறித்து கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிஜிபி ராஜேந்திரன்

கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடிகர் எஸ்.வி.சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர். அவர் மீது பொது அமைதியை சீர்குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. தலைமறைவாக இருக்கும் அவர், சாதாரணமாக இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. ராஜேந்திரனும் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், எஸ்.வி. சேகர் மீது கைது நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் செய்தி எழுப்பினர். ஆனால், இதற்கு, பதிலளிக்க மறுத்த டி.ஜி.பி., அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியடையச் செய்தது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...