கோவையில் ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் நில அளவையாளராக கதிரேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் வாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி 2.5 ஏக்கர் நிலத்தைப் பட்டா உட்பிரிவு மாற்ற கதிரேசனை அணுகியுள்ளார். அப்போது, பட்டா உட்பிரிவு மாற்ற விவசாயிடம் ரூ. 35 ஆயிரம் லஞ்சமாக தருமாறு நிலஅளவையாளர் கதிரேசன் கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் கொடுத்த விவசாயி, மேற்கொண்டு பணத்தை வழங்க விரும்பவில்லை.



எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்ட விவசாயி, நிலஅளவையாளர் கதிரேசனிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கதிரேசனை கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிங்காநல்லூரில் உள்ள கதிரேசனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...