உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி : பூத்துக் குலுங்கும் மலர்களை கான பொதுமக்கள் ஆர்வம்..!

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த 122-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



வகைகள் 

இந்த மலர் கண்காட்சியில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆசியாடிக் லில்லி பம், பிளாக்ஸ், சால்வியா, பால்ஸம், உள்பட 18 மலர் வகைகள், 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் ஜீவ நாடியாகத் திகழும் பழமை வாய்ந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி, பூங்காவிற்கு வரும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. 



பூங்காவிற்கு வரும் சிறுவர்களை ஈர்க்கின்ற வகையில் பார்பி டால் என்றிழைக்கப்படும் பொம்மை 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 



மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்துக்கொள்ள ஏதுவாக 'செல்பி-ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது மலர் கண்காட்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...