கல்வி உரிமை சட்டத்தின்கீழ் இலவச கல்வி; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 



ஏழை, மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கடைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை இலவசமாக படிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும், விண்ணப்பங்களை இணையதளம் மட்டுமல்லாமல் மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார வள மையம், தமிழக அரசின் இ-சேவை மையங்களிலும் செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். மொத்தமுள்ள 1 லட்சம் இடங்களுக்கு இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பித்துள்ள பள்ளிகளில், முன்னுரிமை அடிப்படையிலும், குலுக்கல் முறையிலும் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், விண்ணப்பம் நிராகரிப்பட்டதற்கான காரணங்களை சம்பந்தபட்ட பள்ளிகள் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பள்ளியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...