அன்னூர் அருகே வேன் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி - பத்து பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மினி வேன் மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியாக உதைக்கு வந்த வேன் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணித்த ரிஷி என்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.

மேலும், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...