வாகன விபத்தில் மகன் பலி: சோகம் தாளாமல் பெற்றோர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மகன் உயிரிழந்த சோகம் தாளாமல் பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மகன் உயிரிழந்த சோகம் தாளாமல் பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (54) இவரது ஒரே மகன் நிசாந்த். திண்டல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பாஸ்போர்ட் பதிவு செய்வதற்காக தனது உறவினர் கிருபாகரன் என்பவருடன் கோவை சென்றுவிட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி நேற்று மாலை பைக்-கில் சென்று கொண்டிருந்தனர்.



அவர்களது பைக் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோவையிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ-வில் இருந்த பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இந்நிலையில், அதிவேகமாக வந்த நிசாந்த்-ன் பைக் எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நிசாந்த் மற்றும் கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த நிசாந்த்-ன் பிரேதத்தை அவினாசி அரசு மருத்துவமனையில் அடையாளம் காட்டவந்த தந்தை சக்திவேல் (54) மற்றும் தாய் சுதா (45) ஆகியோர் துக்கம் தாளாமல், குளிர்பானத்திற்குள் விசம் கலந்து குடித்தனர். தகவல் அறிந்து அவர்கள் இருவரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிள்ளைகள் மீது அளவற்ற பாசத்தை வைக்கும் பெற்றோருக்காக, நிதானத்துடன் செயல்பட்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...