பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ; 94.5 சதவீதம் தேர்ச்சி

கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டும் 4,74,340 மாணவர்கள், 4,76,057 மாணவிகள் என 9,50,397 பேர் எழுதினர். இதுதவிர, 50,743 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இன்று வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 

 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

5,584 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 1,687 ஆகும். 2,06,796 பேர் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 



முதலிடம் 

சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 98.38 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 98.26 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...