பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு காலமானார்

வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.

வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். 

பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குரு (57). இவர் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது சொந்த ஊர் காடுவெட்டி. சொந்த ஊரின் பெயரால் இவர் காடு வெட்டி குரு என அழைக்கப்பட்டார்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவரை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது மறைவுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...