சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் சுமார் 28 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியுள்ளனர். இதில் 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 4,138 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடந்து முடிந்தன. வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.

இதையடுத்து சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதல் 3 இடங்களைப் பிடித்த மண்டலங்கள்:- 

திருவனந்தபுரம் மண்டலம் - 97.32%

சென்னை மண்டலம் - 93.87%

டெல்லி மண்டலம் - 89%

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...